‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியன். இவர் ரேடியன்ஸ் என்று நிறுவனத்தை நடத்தி வருகிறார். காவியத் தலைவன், வாயை மூடி பேசவும் உள்பட சில படங்களையும் தயாரித்துள்ளார். வருண் மணியனும், நடிகை த்ரிஷாவும் தீவிரமாக காதலித்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் நின்றுவிட்டது.
வருண் மணியனுக்கு கடந்த சில மாதங்களாகவே கொலை மிரட்டல் வந்தது. இதையொட்டி அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வருண் மணியன் நேற்று தனது நந்தனம் அலுவலகத்தில் பணிகளை முடித்து விட்டு லிப்டில் கீழே இறங்கி உள்ளார். அவருடன் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களும் இறங்கி உள்ளனர்.
திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் லிப்டின் உள்ளேயே வருண் மணியனை கடுமையாக தாக்கி உள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத வருண் மணியன் உதவிக்கு அழைத்துள்ளார். அவரது சத்தம் கேட்டு வந்த பணியாளர்கள் தாக்கிய இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிபட்ட இருவரும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த முத்துகுமார், பாலமுருகன் என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.