‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை தயாரித்து இயக்கியவர் கார்த்திக் நரேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. துருவங்கள் பதினாறு படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் புதியபடம் 'நரகாசூரன்'. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும், பத்ரி கஸ்தூரியும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(செப்.16) ஊட்டியில் தொடங்கியது.
துருவங்கள் பதினாறு படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றியடைந்ததை அடுத்து, நரகாசூரன் படத்தையும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்குகின்றனர். இப்படத்தில் அரவிந்த்சாமி, 'மாநகரம்' புகழ் சந்தீப், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா, 'மீசையை முறுக்கு' படப் புகழ் ஆத்மிகா முதலானோர் நடிக்கிறார்கள்.
'துருவங்கள் பதினாறு' படம் போல் இந்தப்படமும் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது.