போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
புதிய தமிழ் திரைப்படங்களை இணையதளத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றி வரும் தமிழ்கன் என்ற இணையதளத்தில் நிர்வாகிகள் ஒருவரான கவுரி சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்கன் போன்ற சட்டவிரோத இணையதளங்களக்கு திரைத்துறையினரே உதவி வருகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலை தயாரிப்பாளர் சங்க பொருளாளரும், பிரபல தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்கன் கவுரி சங்கங்கரை பல நாட்கள் திட்டமிட்டு ஆதாரத்துடன் பிடித்தோம். அதேபோன்று தமிழ் ராக்கர்ஸ் செயல்படும் இடத்தையும், யார் செயல்படுத்துகிறார்கள் என்பதையும் கண்டுபிடித்து விட்டோம். தக்க ஆதாரங்களுக்காக காத்திருக்கிறோம். ஆதாரம் கைக்கு வந்ததும். அவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
இதுபோன்ற சட்டவிரோத இணையதளங்களில் படங்களை பதிவேற்றம் செயற்வதற்கு திரைத்துறையில் பணியாற்றும் சில ஊழியர்கள் உதவி செய்கிறார்கள். சில ஆயிரம் ரூபாய் பணத்துக்காக அவர்கள் இந்த பெரிய தவறை செய்வதாக கேள்விப்படுகிறோம். அவர்களை கண்டுபிடித்து களையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். என்றார்.