ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்ற பிறகு ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அது திரையரங்கில் விற்கப்படும் சினிமா டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தனியாக ஒதுக்கப்பட்டு அது விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள தனது துப்பறிவாளன் படத்தில் இந்த திட்டத்தை அவர் செயல்படுத்துகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
துப்பறிவாளன் படத்தின் திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம், வறுமையில் உள்ள விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும். தமிழ் நாட்டில் 350-க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பறிவாளன் திரையிடப்படுகின்றது. அதில் எத்தனை காட்சிகள் நடைபெறுகின்றதோ, அத்தனை காட்சிகளிலும் விற்கப்படும் டிக்கெட்டுகளிலிருந்தும் ஒரு ரூபாய் வசூலித்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.