போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் படு தோல்வியடைந்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ராவணன், கடல்' ஆகிய படங்களை விடவும் மோசனமான தோல்வியைத் தழுவியது அந்தப் படம். இருந்தாலும் அந்தத் தோல்வியையும் தட்டிவிட்டு அடுத்த படத்திற்குத் தயாராகி வருகிறார் மணிரத்னம்.
அவருடைய அடுத்த படத்தில் ஜோதிகாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். படத்தில் நாயகர்களாக நடிக்க விஜய் சேதுபதி, நானி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருவரது கைவசமும் அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் அவர்களது தேதி கிடைப்பது சிரமமாக உள்ளதாகத் தெரிகிறது.
விஜய் சேதுபதி, நானி இருவருமே அவர்களுக்காகக் கதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களைத் தேடி வரும் கதைகளுக்கு அவர்கள் பொருத்தமாக இருப்பார்களா என்பதை அலசிப் பார்த்து நடித்து வருகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கும் தொடர்ந்து வெற்றி கிடைத்து வருகிறது. மணிரத்னம் படமாச்சே என்று நடிப்பார்களா அல்லது அவர்களுக்குப் பொருத்தமான கதையாக இருந்தால் மட்டும் நடிப்பார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.