போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
புதிதாக உருவாகும் படத்திற்கு மதுபானக்கடை என்று பெயரிட்டுள்ளனர். தமிழகத்தில் எக்கச்சக்க டாஸ்மாக் கடைகள் குடிமகன்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், குடிமகன்களை குஷிபடுத்துவதற்கென்றே புதிய படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் கமலக்கண்ணன். அவரது புதிய படத்திற்கு மதுபானக்கடை என்று பெயரிட்டுள்ளார். குடியின்றி அமையாது உலகு என்ற தத்துவத்துடன் படத்தை உருவாக்கி வரும் கமலக்கண்ணன், இப்படத்தில் ஏராளமான நிஜ குடிகாரர்களையும் நடிக்க வைத்திருக்கிறாராம். இப்படி ஒரு தள்ளாட்ட கதையிலும், தாலாட்டுகிற அளவுக்கு ஒரு காதலையும் சொல்லப் போகிறாராம் கமலக்கண்ணன்.