‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கர்நாடகாவின் பிரபலமான பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கவுரி லங்கேஷின் நெருங்கிய நண்பரும், நடிகருமான பிரகாஷ்ராஜ் நேற்று கவுரி லங்கேஷ் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த படுகொலை குறித்து பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கவுரி லங்கேஷ், என் 30 ஆண்டுகால நண்பர். லங்கேஷ் என்னைப் பொறுத்தவரையில் ஒரு ஹீரோ. அவரின் விதைகள் நாங்கள். இப்போதைய சிந்தனையாளர்களைக் காட்டிலும் அதிகம் சிந்தித்து, பேசி, எழுதியவர் லங்கேஷ். ஆனால், அப்போது சமுதாயத்தில் பிறரின் சிந்தனைகளை மதிக்கும் பக்குவம் இருந்தது. இப்போது அந்தப் பக்குவம் எங்கே போனது என்று தெரியவில்லை. கவுரி லங்கேஷை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் வேலை. அதை அரசியலாக்குவதில் அர்த்தமில்லை. ஆனால், இங்கே 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேள்வி எழுப்புபவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன.
அடக்குமுறை நிகழ்த்தப்படுகிறது. இந்த நாட்டில் மனசாட்சி இல்லாமல் செயல்படுகிறார்கள்.
ஒருவருக்கு தன் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால், அந்தக் கருத்து மேலெழக் கூடாது என்று அடிக்கிறார்கள். இப்படிப்பட்ட படுகொலை மூலம் மவுனமாகிவிடுவார்கள் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் இப்போது கவுரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகியிருக்கிறது. இந்த சத்தம் இன்னும் அதிகரிக்கும். துப்பாக்கி குண்டுகளால், மிரட்டலால், கொலையால் இந்த சத்தத்தை நிறுத்த முடியாது.
ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி ஒரு கொலையைச் செய்திருக்கிறார்கள். இங்கே பயம் என்பது தேசிய நோய் ஆகிவிட்டது. உண்மையைப் பேசினால் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. இது எதிர்ப்பு அரசியலை, மாற்று சிந்தனையை, இன்னொரு குரலைக் கொல்லும் முயற்சி. கோழைகளுக்கு நடுவில் வாழ்வது போல் இருக்கிறது என்றார் பிரகாஷ்ராஜ்.