அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கொலவெறிடி பாடல் ஹிட் ஆனதைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார் நடிகர் தனுஷ். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 3 படத்தில் இடம்பெறும் கொலவெறிடி பாடலை, படத்தின் நாயகன் தனுஷ் எழுதி, பாடியிருக்கிறார். இந்த பாடல் உலகம் முழுவதும் செம ஹிட் ஆகியிருக்கிறது. பிரதமரே அழைத்து விருந்து கொடுக்கும் அளவுக்கு தனுஷின் புகழ் கொலவெறிடி பாடலால் ஓங்கியிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் கொலவெறிடி பாடல் ஹிட் ஆனதையொட்டி, உத்தரபிரதேச மாநிலம், பனாரஸில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டுள்ளார். இதுபற்றி தனுஷ் அளித்துள்ள பேட்டியில், காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ள நகரை ரொம்ப விரும்புகிறேன். அமைதி, அழகு போன்றவற்றின் சொர்க்கமாக அது விளங்குகிறது. எனவே மீண்டும் அங்கு செல்வேன், என்று கூறியுள்ளார்.