போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த படங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. கடந்த ஆண்டு வெளிவந்த 191 படங்களில் இருந்து 8 படங்கள் தேர்வு செய்யப்பட்டு. அதனை 40 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அந்த ஆய்வின் அடிப்படையில் விசாரணை, ஜோக்கர், அப்பா, உறியடி படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது, சங்கத்தின் தலைவர் ச.தமிழ் செல்வன் தலைமை தாங்கினார், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். நடிகை ரோகினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜு முருகன், விசாரணை படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், அப்பா படத்தின் இயக்குனர் சமுத்திரகனி, உறியடி படத்தின் இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர்.
"மிகச் சிறந்த படைப்புகள் வெளிவரும்போது அவற்றைத் தோளில் வைத்து கொண்டாடும் உரிமை எழுத்தாளர்கள் உண்டு. அதன் ஒரு பகுதி தான் இந்த விருதுகள். இந்தப் படைப்புகள் தான் நம் சொத்துகள். சிறு முதலீட்டில் படங்கள் வெளிவந்தாலும், நான்கு திரைப்படங்களும் பல்வேறு போராட்டங்களைக் கடந்து வெற்றி பெற்றிருக்கின்றன" என்றார் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன்.