போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கேரள முதல்வர் பினராய் விஜயனை கமல் சந்தித்து பேசினார். முதல்வர் இல்லத்தில் கமலுக்கு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.
சமீபகாலமாக கமல் டுவிட்டர் மூலம் அரசியல் தொடர்பானை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று கூறியது ஆளும் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. அவர் அரசியலுக்கு வர அச்சாரமாக பேசி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.
சில தினங்களுக்கு முன்னர் கோவையில் திருமண விழாவில் பேசியபோது கூட,"அரசியல் சூழலை, இப்படியே விட்டு வைக்காமல், மாற்ற வேண்டியது, நம் கடமை. கோட்டையை நோக்கிப் புறப்படுவோம். நான், நேரடி அரசியலுக்கு வந்துவிட்டேன்" என்றார்.
இந்நிலையில் கமல் நேற்று இரவு கேரளா சென்றார். இன்று(செப்., 1) மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். தொடர்ந்து கமலுக்கு முதல்வர் வீட்டிலேயே ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.
கமல் தெரிவித்து வரும் கருத்துக்கள் இடதுசாரி சிந்தனகள் கொண்டதாகவே இருந்து வருகிறது. இதனால் இந்த சந்திப்பில் அரசியல் ஏதும் பேசப்பட்டடதா ? இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு யூகங்கள் கிளப்பியுள்ளன.