போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர் சாதனா. இப்போது மீண்டும் ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் நடித்து வருகிறார். தங்க மீன்கள் படத்தில் ராமின் மகளாக நடித்தவர். இந்தப் படத்தில் மம்முட்டி மகளாக நடிக்கிறார். இதுகுறித்து சாதனா கூறியதாவது:
ராம் சார்தான் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தார். அவர் எனக்கு இன்னொரு அப்பா. எனது நாட்டிய நிகழ்ச்சிக்கு வந்த ராம் சார் "பேரன்பு கதையை சாதனாவுக்காகவே எழுதினேன் அவளால் மட்டுமே அதில் நடிக்க முடியும். சாதனா என் பொண்ணு" என்றார். இதை விட வேறு என்ன பெருமை வேண்டும். என் எதிர்காலத்தையும் ராம்சார்தான் தீர்மானிப்பார்.
தங்க மீன்கள் படம் போன்று பேரன்பு படமும் அப்பா மகள் உறவை பற்றியதுதான். அப்பா மகள் உறவை வேறு கோணத்தில் சொல்கிற படம். மம்முட்டி அங்கிளுடன் நடித்தது பெருமையாக இருக்கிறது. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். என்கிறார் சாதனா.