போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்துவிட்டார் நடிகர் அஜித். இருப்பினும் ரசிகர்கள், அஜித்தை கொண்டாடி வருகின்றனர். இன்று(ஆக., 24) அவரது விவேகம் படம் ரிலீஸாகி உள்ளது. நேற்று முதலே கொண்டாட்டங்களை தொடங்கிவிட்ட அஜித் ரசிகர்கள், தியேட்டர்களில் பட்டாசு, தோரணங்கள், பேனர், கட்-அவுட் என வைத்துள்ளனர்.
அதுமட்டுமல்ல பல தியேட்டர்களில் அஜித்தின் விவேகம் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகமும் நடத்தியுள்ளனர். இதனால் பல லிட்டர் பால் வீணாகியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கோர்ட் அறிவுறுத்திய போதும், சில ரசிகர்கள் தொடர்ந்து இதை செய்து வருகின்றனர்.
நம் நாட்டில் இன்னும் பாலுக்காக ஏங்கும் குழந்தைகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி இருக்கையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என நடிகர் அஜித், தன் ரசிகர்களை கண்டிக்கலாம் அல்லது ஒரு வேண்டுகோளாவது வைக்க வேண்டும் என்பதே சமூகநல விரும்பிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.