‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தற்போது ஒரே நேரத்தில் இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம், வேலைக்காரன் என பல படங்களில் நடிக்கும் நயன்தாரா, இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அதனால் அவரது கால்சீட் டைரி நிரம்பி வழிகிறது. இதில், அதர்வாவுடன் இணைந்து நயன்தாரா நடித் துள்ள இமைக்கா நொடிகள் படப்பிடிப்பு எப்போதோ முடிய வேண்டியது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை என்கிறார்கள்.
இதற்கு காரணம் நயன்தாராதானாம். காரணம், இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு அவர் லீடு ரோலில் நடிக்க கமிட்டான அறம், கொலை யுதிர்காலம் ஆகிய படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்த நயன்தாரா, அதையடுத்து வேலைக்காரன் படத்திற்கும் கால்சீட் கொடுத்து விட்டாராம். இதனால் இமைக்கா நொடிகளில் நயன்தாரா சம்பந்தப்பட்ட நிறைய காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.
அந்தவகையில், இன்னும் 15 நாட்களுக்கு நயன்தாரா இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தால்தான் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்க முடியுமாம். அதனால் நயன்தாராவின் கால்சீட்டுக் காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.