‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் பாடல் காட்சியை ஐரோப்பாவில் உள்ள குரோடியா நாட்டுக்கு சென்ற படக்குழுவினர் அங்குள்ள அருமையான லொகேஷன்களில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட ஒரு பாடலை படமாக்கி வருகின்றனர்.
இந்த பாடல் காட்சியோடு தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறதாம். விக்னேஷ் சிவன் எழுதி, அனிருத் இசையில் வெளியான 'நானா தானா...' என்ற பாடல் ஏற்கெனவே சிங்கிள் டிராக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விவேகம் வெளியாகி அதன் பரபரப்பு ஓய்ந்த சில நாட்களில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மற்றொரு பாடலை சிங்கிள் ட்ராக்காக வெளியிட உள்ளனர்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும், 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.