போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
தெறி படத்திற்கு பிறகு விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருடன் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக தயாராகி வருகிறது.
வருகிற 20ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மெர்சல் படத்தின் இசை பிரமாண்டமாக வெளியாக உள்ளது. முன்னதாக மெர்சல் படத்தில் ஆளப்போறான், நீதானே பாடல்கள் வெளியாகி ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த இரண்டு பாடல்களும் டுவிட்டரில் டிரெண்ட்டிங்கில் இருந்தன.
இந்நிலையில் டுவிட்டர் இந்தியா, மெர்சல் விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய எமோஜியை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொம்மையை தான் எமோஜி என்கிறார்கள். எந்த ஒரு தென்னிந்திய நடிகரின் படத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம் விஜய் படத்திற்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் டுவிட்டரில் எமோஜி பெறும் முதல் தென்னிந்திய படம் என்ற பெருமையை விஜய்யின் மெர்சல் பெற்றுள்ளது.