போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ரஜினி, கமல் இருவரில் யார் முழுநேர அரசியலில் குதிப்பார்கள் என்பதுதான் இன்றைக்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. "போர் வரட்டும் பார்த்துக்கலாம்" என்று ரஜினி அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக அறிவித்தார். கமல், நான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதே அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கூறி ஆளும் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரில் ஒருவர் நேரடி அரசியலில் குதிப்பார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் ரஜினி, தான் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும், ரசிகர்கள், மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை மறைமுகமாக ஒரு மாநாடு மூலம் கணிக்க இருக்கிறார். ரஜினியின் நண்பரும், ஆலோசகருமான, காந்திய மக்கள் இயக்கம் தமிழருவி மணியன் திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்துகிறார்.
இந்த மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ரகசிய சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மன்றத்திலிருந்து எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்கிற விபரத்தை தலைமை மன்றத்துக்கு தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அதோடு மாநாட்டில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை கவனமாக கேட்டு அதுபற்றி தங்களது அபிப்ராயத்தை தலைமை மன்றத்துக்கு எழுதி அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்து ரஜினி அரசியலுக்கு வருவது தீர்மானிக்கப்படும் என்கிறார்கள்.
இந்த மாநாடு குறித்து நேற்று தமிழருவி மணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கும் வேள்வியில் காந்திய மக்கள் இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை உட்கட்சிக் குழப்பங்களால் கோட்டையிலிருந்து வெளித்தள்ளப்படுவதற்கான நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
அரசியல் அரங்கில் நல்ல மாற்றம் ஒன்று நிகழாதா? நம்மை ரட்சிக்கும் ஒரு நல்ல தலைமை வந்து வாய்க்காதா? என்று ஏங்கித் தவமிருக்கும் சூழலில் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து ஊழலின் ஆணிவேரை அறுத்தெறிவதற்கு உறுதி பூண்டிருக்கிறார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்? அவரால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழக் கூடுமா? அவரால் மக்கள் எதிர்பார்க்கும் நல்லரசியல் எப்படி அமைய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தருவதற்காகவும், ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காகவும் காந்திய மக்கள் இயக்கம் ஆகஸ்ட் 20 அன்று திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த இருக்கிறது.
காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்களும், ரஜினியை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நெஞ்சங்களும், ஆரோக்கியமான அரசியல் மாற்றத்தை விரும்பும் அறிவார்ந்த பொது மக்களும் திரளாகக் கூடவிருக்கும் இந்த மாநாட்டின் முடிவிலிருந்து எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான அரசியல் திருப்புமுனை தொடங்கவிருக்கிறது.
இவ்வாறு தமிழருவி மணியன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.