போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகர் ஆரி மாறுவோம் மாற்றுவோம் என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தற்போது சத்யபாமா பல்கலைக்கழகம், டிரான்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய விதைகளை விதைத்து கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். திண்டிவனத்தை அடுத்த ஆவணிப்பூர் கிராமத்தில் வருகிற 26ந் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் மற்றும் லோகோவை கமல் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
நாம் நம் விவசாயத்தை அழித்து வருகிறோம். பாரம்பரிய விவசாயம் மறைந்து வருகிறது. 70 சதவிகித பாரம்பரிய விதைகள் அழிந்து விட்டது. 30 சதவிகிதம் மட்டுமே எஞ்சியுள்ளது. இலைகள் மீது பூச்சிகள் உட்காராமல் இருக்க வேரில் விஷம் பாய்ச்சுகிறோம். இதனால் மறைமுகமாக நாமும் விஷத்தை உண்கிறோம். நம் உணவு விஷமானதற்கு எதிரிகள் காரணமல்ல நமது பேராசைதான் காரணம். உணவு பொருட்கள் பெரும் லாபம் தரும் வியாபாரமாகிவிட்டது. இந்த நிலை மாறவேண்டும்.
அடிப்படையில் எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். நானும் ஒரு விவசாயிதான். என் வீட்டின் மொட்டை மாடியில் மாடித் தோட்டம் அமைத்திருக்கிறேன். மாறுவோம் மாற்றுவோம் பணிகள் உலக சாதனைக்காக மட்டுமல்லாமல் நம் உணவு சாதனைக்காகவும் உழைக்க வேண்டும். எனது மன்றத்தினர் இதற்கு துணை நிற்பார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, சத்யபாமா பல்கலைக கழக மக்கள் தொடர்பாளர் மரியா ஜீனா ஜான்சன், டிரான்ஸ் இந்தியா உரிமையாளர் ராஜேந்திரன், தொண்டு நிறுவனர் பாலம் கல்யாணசுந்ரம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.