‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல குணச்சித்ர நடிகர் சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79. கடந்த மூன்று மாதங்களாகவே உடல்நலம் சரியில்லாமல், சரியாக உணவு கூட உட்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்த சண்முகசுந்தரம், சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 15) காலை திடீரென அவரது உயிர் பிரிந்தது.
சென்னையில் பிறந்த நடிகர் சண்முக சுந்தரம், கல்லூரி காலங்களில் நடிப்பு மீது அலாதி பிரியம் கொண்டவர். ஒரு முறை நாடகம் ஒன்றில் இவர் நடித்த அடால்ப் ஹிட்லர் ரோலை பார்த்த சிவாஜி கணேசன், தனது "ரத்த திலகம்" படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். தொடர்ந்து "கர்ணன்" படத்தில் சல்லிய சக்கரவர்த்தியாக நடித்து புகழ்பெற்றார். அதன்பின்னர் "வாழையடி வாழை, இதயக்கனி, குறத்தி மகன், படிக்காத பண்ணையார்" போன்ற பல படங்களில் நடித்தார்.
1989-ல் கங்கை அமரன் இயக்கிய "கரகாட்டாக்காரன்" படம் அவரை இன்னும் பிரபலமாக்கியது. அதன்பின்னர் தொடர்ந்து குணச்சித்ர வேடங்களிலேயே சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வெங்கட்பிரபு இயக்கிய "சென்னை 28, கோவா, சரோஜா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி சென்னை 28 2" படங்களிலும் நடித்தார். கடைசியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" படத்தில் நடித்தார். சினிமா மட்டுமல்லாது ராதிகாவின் அண்ணாமலை, செல்வி, அரசி போன்ற சிரீயல்களிலும் நடித்துள்ளார்.
சண்முகசுந்தரத்திற்கு மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு பிள்ளை உள்ளனர். இவரது உடல் சென்னை, மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை(ஆகஸ்ட் 16) இறுதிசடங்கு நடைபெற இருக்கிறது.
இவரது உடலுக்கு நடிகர்கள் ராதாரவி, சிவகுமார், பிரேம்ஜி, டெல்லி கணேஷ், மனோபாலா உள்ளிட்டோர் பலர் அஞ்சலி செலுத்தினர்.