தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
முரசொலி நாளிதழின் பவள விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்றனர். முரசொலி நாளிதழின் 75வது ஆண்டு பவள விழா சென்னையில் நடந்தது. காலையில் முரசொலி நாளிதழின் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. மாலையில் சென்னை, கலைவாணர் அரங்கில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்க நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது... நான் சிறுவனாக இருந்தபோது, இரண்டு குரலுக்கு அடிமையானேன். முதல் குரல், சிவாஜியின் குரல். அவர், பேசும் தமிழுக்கு சொந்தக்காரர் கருணாநிதி என தெரிந்தபோது, அவர் குரலுக்கும் ரசிகனானேன். ரஜினியை போல், நானும் மேடைக்கு கீழே இருந்திருக்கலாம். அது, பாதுகாப்பானதாக இருக்கும். என்றாலும், தற்காப்பை விட, தன்மானம் முக்கியம் என்பதால், பத்திரிகையாளர்கள் கூடி உள்ள சபைக்கு வந்து விட்டேன். திராவிடம் என்பது நாடு தழுவியது. சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி தமிழகம் வரை வந்தது திராவிடம். தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கும் திராவிடம் நிலைத்திருக்கும் என்றார்.
விழாவினை திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் முன்னின்று தலைமை தாங்கினார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சமீபகாலமாக நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்களை முன்னெடுத்தும் வரும் நிலையில் இருவரும் திமுக., சார்ந்த ஒரு விழாவில் பங்கேற்று இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.