நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
'தெறி' படத்திற்குப் பிறகு அட்லீ - விஜய் கூட்டணி இணைந்துள்ள படம் 'மெர்சல்'. விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்தில் வடிவேலு நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாகத் தயாராகி வருகிறது. படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் பாடல் ஒன்று விரைவில் வெளியாகும் என மெர்சல் படக்குழு தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடல் நாளை(ஆகஸ்ட் 10) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே பாடலின் முதல் வரியை வெளியிட்டிருக்கிறார், இது அரசியல் சலசலப்பை ஏற்படுத்தும் போல் தெரிகிறது. அப்படியென்ன பாடல் வரிகள் என்கிறீர்களா...?
மக்கள் கூட்டத்தின் நடுவே விஜய் வெள்ளை நிற உடையணித்து கைகளை உயர்த்தி இருப்பது போன்று போஸ்டர் வெளியாகியுள்ளது. கூடவே பாடலின் முதல்வரியாக "ஆளப்போறான் தமிழன்..." என்று இடம்பெற்றிருக்கிறது.
தமிழகத்தில், தமிழன் தான் ஆள வேண்டும் என்ற கருத்து ஏற்கனவே ஓங்கி ஒலித்து வரும் வேளையில், விஜய்யின் இந்த "ஆளப்போறான் தமிழன்" பாடல் நிச்சயம் ஒரு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.