‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
போலி, டுவிட் விவகாரத்தில், கோபம் தணியாத சிம்பு நேற்று, சாத்தானின் கடவுளை, வெளியேற வைத்து விடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார். தனியார், டிவி நடத்தும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியாவுக்கு, நடிகர் சிம்பு ஆதரவு தெரிவித்தார். இதைக் காரணம் காட்டி, ஓவியாவை திருமணம் செய்யப் போவதாக வந்த செய்திகளை மறுத்த, சிம்புவுக்கு, கோபம் இன்னும் குறையவில்லை.
நேற்று, போலி டுவிட்டுக்கு பின்னணியில், யார் உள்ளனர் என்பது எனக்குத் தெரியும்; இறுதியாக எச்சரிக்கிறேன். இதுபோன்ற செயலில் மீண்டும் ஈடுபட்டால், இனி வேறு வழியில் பதிலடி கொடுப்பேன். சாத்தானின் கடவுளை வெளியேற வைத்து விடாதீர்கள் என, டுவிட்டரில் எச்சரித்துள்ளார்.