‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கேரளாவில், நடிகை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்பிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரால் நிற்க கூட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
வெர்டைகோ பாதிப்பு
கேரளாவில் உள்ள ஆலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப்பிற்கு, வெர்டைகோ எனப்படும் காதுகளின் உட்பகுதியில் உள்ள திரவத்தில் நிலையற்ற தன்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கிறுகிறுப்பு, தலை சுற்றல், நிற்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை பரிசோதனை செய்ய வந்த டாக்டர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். அவருக்கு போதிய மருத்துவ வசதி அளித்தும் உடல் நலம் சீராகவில்லை என்றே கூறப்படுகிறது.
வெறும் தரையில் பல நாட்கள் படுத்ததாலும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து சிறை கண்காணிப்பாளர் ஆலோசித்தாலும், பாதுகாப்பு காரணங்களால் கைவிடப்பட்டது. நடிகர் திலீப்பின் நீதிமன்ற காவல் நாளை முடிவடைகிறது. அவரது சார்பில் ஆஜராக உள்ள புதிய வழக்கறிஞர் ராமன் பிள்ள, ஜாமின் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.