ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வெள்ளாவி பொண்ணு டாப்சி. தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் அவர் நடித்த சில படங்கள் ஹிட்டாகிவிட்டதால் இப்போது அங்கேயே தங்கிவிட்டார்.
இதுநாள் வரை மும்பையில் வாடகை வீட்டில் வசித்து வந்த டாப்சி, இப்போது சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட்டார். மும்பையின், அந்தேரி பகுதியில் 3 பெட்ரூம் கொண்டு அடுக்குமாடி வீட்டை வாங்கியுள்ளார்.
இதுகுறித்து டாப்சி கூறியிருப்பதாவது... "எனது பிறந்தநாளுக்குள் மும்பையில் சொந்தமாக கார், வீடு வாங்க வேண்டும் என்று குறிக்கோள் வைத்திருந்தேன். சில மாதங்களுக்குள் முன்பு கார் வாங்கிவிட்டேன், இப்போது வீடு வாங்கிவிட்டேன். நான் நினைத்தது எனது பிறந்தநாளுக்கு முன்பே நிறைவேறிவிட்டது. இதற்காக கடவுளுக்கு நன்றி. தற்போது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் என் சகோதரியுடன் அந்த வீட்டில் குடியேற போகிறேன்" என்று கூறியுள்ளார்.