‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு படத்திற்காக நான்கு வருட காலம் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் வேறு எந்த நடிகராவது இருந்திருப்பாரா என்பது சந்தேகம் தான். 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் மொத்தமாக நான்கு வருட காலத்தை தன் திரையுலக வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவர் பிரபாஸ். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் 'பாகுபலி' படத்தின் மீது நம்பிக்கை வைத்து இரண்டு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து நல்ல பெயரையும் பெற்றார் பிரபாஸ்.
மீண்டும் அப்படி ஒரு நான்கு வருட காலம் ஒரு படத்திற்காக விட்டுக் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார். “நான்கு வருடம் என்பது நீண்ட காலம். ஒரு நடிகரின் திரையுலகப் பயணத்தில் அது மதிப்புமிக்கது. பாகுபலி படத்திற்காக நான்கு வருட காலம் செலவிட்டது எனக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது. மீண்டும் ஒரு படத்திற்காக நான்கு வருடம் செலவிடுவது என்பது மிகவும் நீண்டது. ஆனாலும், ஒரு கதை என்னை ஆச்சரியப்படுத்தினால் அதற்காக இரண்டு வருடங்கள் வேண்டுமானால் செலவிடுவேன்,” எனக் கூறியுள்ளார்.
பிரபாஸ் தற்போது 'சாஹோ' படப்பிடிப்பிற்கான அவருடைய தோற்றத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.