‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள், கமலை கடுமையாக விமர்சித்தனர். பா.ஜ., தலைவர்களும் கமல்ஹாசனை கமலை விமர்சித்தனர்.
ஊழல் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஊழல் புகாரை தெரிவியுங்கள் என கமல் மக்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியானதுமே அமைச்சர்களின் இணையபக்கங்கள் சில செயல்படவில்லை. தொடர்ந்து கமல்ஹாசன், தமிழக அரசியல் பற்றியும், ஊழல் பற்றியும் குரல் எழுப்பி வருகிறார்.
இந்நிலையில் கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், "அழுகிய முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல், இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது" என பதிவிட்டிருக்கிறார்.