ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்த 'கத்தி' திரைப்படம் 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. கடந்த வருடம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க 'கைதி நம்பர் 150' என்ற பெயரில் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது.
'கத்தி' படம் வெளிவரும் சமயத்தில் அந்தப் படத்தின் கதை ஏ.ஆர்.முருகதாஸுடையது அல்ல, என்னுடையது என மிஞ்சூர் கோபி என்பவர் சர்ச்சையைக் கிளப்பினார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த விவகாரம் நீதிமன்றவம் வரை சென்று, பின்னர் ஒரு வழியாக ஒரு சமாதான முடிவுக்கு வந்து படம் வெளியானது.
சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் பேசி ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இருந்து தான் 'கத்தி' படத்திற்கான இன்ஸ்பிரேஷனை எடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். அதில் ஒரு எம்ஜிஆர் அந்தப் பக்கம் போய்விடுவார், மற்றொரு எம்ஜிஆர் இந்தப் பக்கம் வந்துவிடுவார். பழைய படத்தைக் கொஞ்சம் மாற்றி புதிதாக எடுத்தேன். ஆனால், சிலர் தேவையில்லாமல் குற்றச்சாட்டு சொன்னார்கள். நீதிமன்றத்தில் நிரூபித்து வெற்றி பெற்றேன் எனச் சொல்லியிருக்கிறார்.
அப்படியென்றால் முருகதாஸ் இப்போது இயக்கி வரும் 'ஸ்பைடர்' படம் எந்த பழைய படத்தின் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும்.