‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை பாவனா வழக்கு தொடர்பாக, நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன், அவரது மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காவ்யா மாதவன் கதறி அழுததாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை பாவனா வழக்கில், நடிகர் திலீப், ஜூலை, 10ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், நடிகை பாவனாவின் படங்கள் அடங்கிய மெமரி கார்டை, காவ்யா மாதவனின் கடையில் கொடுத்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.
ஆலுவா வீட்டில் விசாரணை
இந்த சூழ்நிலையில், ஆலுவா நகரில் உள்ள திலீப் வீட்டில், காவ்யா மாதவனிடம் நேற்று முன்தினம் காலை, 11 மணி முதல், மாலை, 5 மணி வரை ஏ.டி.ஜி.பி., சந்தியா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நடிகை பாவனா காரில் கடத்தப்பட்ட பிப்., 17 ம் தேதி அன்று நடிகர் திலீப் நடவடிக்கை எப்படி இருந்தது, அதன் பிறகு அவர் செயல்பாடுகள் எப்படி இருந்தன என போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது காவ்யா மாதவன் கதறி அழுததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காவ்யா மாதவன் உருப்படியாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் பிறகு, காவ்யா மாதவன் தாய் சியாமளாவிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். தாய் மற்றும் மகளுக்கு நடிகை பாவனா கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக என்ன தெரியும் என்ற ரீதியில் விசாரணை இருந்தது.