‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்த் திரையுலகம் கடந்த மாதம் தியேட்டர்கள் ஸ்டிரைக்கைச் சந்தித்தது. இந்த மாதத்தில் பெப்ஸியின் ஸ்டிரைக்கைச் சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பெப்ஸி ஊழியர்களுக்கான சம்பளத்தை தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயித்தபடி மட்டுமே வழங்க வேண்டும் என்றும், அவர்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து படத்தை தயாரிக்கலாம் என்றும் முடிவெடுத்தார்கள். அதையும் மீறி பெப்ஸி சங்கத்தினர் வந்து தகராறு செய்தால் தயாரிப்பாளர் சங்கம் படப்பிடிப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றும் அறிவித்தார்கள்.
முன்னர் நடந்த வழக்கு ஒன்றில் பெப்ஸி சங்கத்தினர் இல்லாமலும் படப்பிடிப்பை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையும் தயாரிப்பாளர் சங்கத்தினர் சுட்டிக் காட்டியுள்ளார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த திடீர் முடிவால் பெப்ஸி சங்கத்தினர் கடும் கோபத்தில் உள்ளார்களாம்.
தற்போது அவர்களின் அவசரக் கூட்டம் ஒன்று நடந்து வருகிறது. அதில் தயாரிப்பாளர் சங்க முடிவுக்கு எதிராக ஸ்டிரைக் நடத்தலாமா என ஆலோசித்து வருகிறார்களாம். அதோடு, எந்த தமிழ் பட படப்பிடிப்பையும் நடத்தவிடக் கூடாது என சிலர் ஆவேசமாகப் பேசி வருகிறார்களாம். அதனால், விரைவில் தமிழ்த் திரையுலகம் மீண்டும் ஒரு ஸ்டிரைக்கை சந்திக்க வேண்டிய நிலை வர வாய்ப்புகள் அதிகம்.