‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இதுவரை வந்த நிகழ்ச்சிகளில் 'ரியல்' இல்லாத விஷயங்கள் தான் அதிகமிருக்கும். ஆனால், அவற்றைத்தான் ரியாலிட்டி ஷோ என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது தான் 'பிக் பாஸ்' என்ற உண்மையான ரியாலிட்டி ஷோ வந்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியும் முழுவதும் 'ஸ்கிரிப்ட்' செய்யப்பட்டதுதான் என்றும் சிலர் கொண்டிருக்கிறார்கள். அப்படியே ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்று சொன்னாலும் யதார்த்த சினிமாவை விடவும் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக ரசிக்க வைக்கிறது.
அதற்கு முழு முதற்காரணம் ஓவியா மட்டும் தான். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவு யதார்த்தமாக நடந்து கொள்ளும் ஓவியா நாளுக்கு நாள் அவருக்கான ரசிகர்களை அதிகரித்துக் கொண்டே வருகிறார். அவருடைய சின்னச் சின்ன செயல்கள் கூட ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் அது இன்னும் அதிகமாக இருந்து ரசிகர்களை வியக்க வைத்தது. நடந்து கொண்டிருக்கும் போது தெரியாமல் ஒரு சிறிய தூணை காலால் இடறிவிட்டார். அதனால் அந்த கல்லுக்குக் 'சாரி' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அடுத்து 'கன்பெஷன்' அறையில் பிக் பாஸுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அழுவதை மக்களுக்குக் காட்டக் கூடாது என்பதற்காக முகத்தைத் திருப்பிக் கொண்டார். அதோடு காலையில் ஜாலியான பாடல்களை மட்டும் போடுங்கள், அன்பான பாடல்களைப் போட்டால் நான் அழுதுவிடுவேன் என குழந்தை போல கேட்டுக் கொண்டு அவரும் அழுது பார்ப்பவர்களையும் அழ வைத்தார். பின்னர், தன்னைப் பற்றி தவறாகப் பேசிக் கொண்டிருக்கும் ஜுலியை பேச அழைத்து ஆச்சரியப்படுத்தினார். வா, ஜுலி அதைப் பத்தி கேக்க மாட்டேன், சும்மா பேசிக்கிட்டிருப்போம் என கள்ளம் கபடமில்லாமல் அழைத்தார். இப்படி தன்னுடைய நிஜமான செயல்களால் தொடர்ந்து வியக்க வைத்துக் கொண்டேயிருக்கிறார் ஓவியா.
நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்குக் கிடைக்கும் சில கோடிகள், பெயரை விட ஓவியாவிற்குக் கிடைத்து வரும் பெயரும், புகழும் கமல்ஹாசனையே மிஞ்சிவிடும் போலிருக்கிறது.