ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் என நடிகர் கமல் கூறியுள்ளார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜ., தலைவர்களும் கமல்ஹாசனை விமர்சித்து உள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்க மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்டன போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர். மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே ரசிகர்கள் தேவை. அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.