போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பழைய படங்களை எடுத்து தூசி தட்டி, இந்தக் காலத்திற்கேற்பட சில பட்டி, டிங்கரிங் வேலைகளைப் பார்த்து புதிதாக யோசித்த கதை போல படைப்பதுதான் இந்தக் காலத்திய டிரென்ட். அந்த விதத்தில் பழைய படங்களைக் காப்பியடிப்பதில் அட்லீ சிறந்த இயக்குனராக இருந்தார். அவருக்குப் போட்டியாக இப்போது 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி வந்துவிட்டனர்.
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் கமல்ஹாசன், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க 1995ம் ஆண்டு வெளிவந்த படமான 'குருதிப் புனல்' படத்தின் கதையை காப்பியடித்து ஒருசில மாற்றங்கள் செய்து 'விக்ரம் வேதா' படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் மாதவன், அர்ஜுன் கதாபாத்திரத்தில் பிரேம், வில்லன் நாசர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
'குருதிப் புனல்' படத்தில் நாசர் தலைமையில் தீவிரவாதக் கும்பல். 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதி தலைமையில் லோக்கல் ரவுடி கும்பல். காவல் துறைக்கும் வில்லன்கள் குரூப்புக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் பொதுவான கதை.
இந்தக் கால ரசிகர்களை வேண்டுமானால் புதிய கதை எனச் சொல்லி ஏமாற்றி விடலாம். 'குருதிப் புனல்' மாதிரியான படங்களைப் பார்த்துப் பார்த்து ரசித்தவர்களிடம் 'விக்ரம் வேதா' கதையை புதிய கதை என்றெல்லாம் சொல்லி ஏமாற்ற முடியாது.