‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தயாரித்து, நடித்து வரும் படம் பில்லா பாண்டி. சரவண சக்தி இயக்குகிறார், ஆர்.கே.சுரேசுடன் இந்துஜா, சாந்தினி, யோகி பாபு, நமோ நராயணா உள்பட பலர் நடித்து வருகிறார்கள். ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.கே.சுரேஷ், அஜித் ரசிகராகவும், மாடுபிடி வீரராகவும் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள அலங்காநல்லூரில் நடந்து வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக தேர்திருவிழா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாற்ற பெப்சி தொழிலாளர்களுடன், துணை நடிகர் நடிகைளும் ஏராளமானோர் சென்னையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து நடித்தனர்.
இதில் படப்பிடிப்பின் போது உள்ளூர் மக்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் தலையிட்டு தீர்த்து வைக்க தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் முயன்றும் முடியவில்லை. பெப்சி தொழிலாளர்கள் பணி செய்ய மறுத்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தயாரிப்பாளர் சுரேஷ், இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோரிடம் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து இருவரும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப்பேசி சமாதானம் செய்து வைத்தனர். இதனால் இரண்டு நாட்கள் தடைபட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.