போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
“துப்பாக்கி, கத்தி” ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் மூன்றாவது முறையாக இணைய உள்ள படத்தின் வேலைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது 'ஸ்பைடர்' படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறார். செப்டம்பர் மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கான மற்ற நட்சத்திரத் தேர்வுகளும் தற்போது நடந்து வருகின்றன.
'கத்தி' படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அத்துடன் படத்தின் நாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது. விஜய்யுடன் தற்போதைய முன்னணி ஹீரோயின்கள் பலரும் ஜோடி சேர்ந்துவிட்டார்கள். இரண்டாவது முறையாவும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அதனால், விஜய் ஜோடியாக இதுவரை அவருடன் நடிக்காத ஒரு ஹீரோயினைத் தேர்வு செய்யலாம் என்று முடிவெடுத்தார்களாம். அதன்படி, 'ஸ்பைடர்' படத்தில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங்கையே விஜய் ஜோடியாக்க முருகதாஸ் முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.
ரகுல் ப்ரீத் சிங் தற்போது 'ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல், விஜய்யுடன் ஜோடி சேர்ந்தால் தமிழிலும் முன்னணிக்கு வர வாய்ப்புள்ளது.
இதுஒருபுறம் இருக்க ஹிந்தியில் அகிரா படத்தை இயக்கிய முருகதாஸ், அப்படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹாவை, விஜய் ஜோடியாக நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறாராம்.
விரைவில் முருகதாஸ், விஜய் படம் பற்றிய முழு விவரம் வெளியாகலாம்.