போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
சூப்பர் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கிற நிலை மாறி இப்போது நாடு முழுவதும் கமல் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று மக்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆளும் கட்சியின் ஊழல்களை கமல், கடுமையாக விமர்சனங்கள் எடுத்து வைப்பதும், தமிழக அமைச்சர்கள் கமலை தரக்குறைவாக விமர்சிப்பதும், எதிர் கட்சிகள் கமலுக்கு ஆதரவாக நிற்பதுமாக கமல் பக்கம் இப்போது அரசியல் காற்று வீச ஆரம்பித்திருக்கிறது.
இந்த நிலையில் நேற்று அவர் டுவிட்டரில் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். அவர் எழுதியிருப்பதாவது:
அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்'' என குறிப்பிட்டு உள்ளார்.
மற்றொரு பதிவில்...
இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தொழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை.
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடி பணிவோர் அடிமையரோ?
முடி துறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
என கவிதை நடையில் எழுதியுள்ள அவர், ''முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று முளைத்த காளான்களெல்லாம் அரசியல் செய்யும்போது நாமும் செய்வோம். காத்திருந்த தோழர்களுக்கு நல்ல செய்தி வர இருக்கிறது. நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர். அரசை தட்டிக் கேட்போம். அரசியலில் குதிக்க முடிவெடுத்தால் நாம் தான் முதல்வர் என்பதாக இதற்கு பொருள். இந்த டுவிட் கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.