ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் தயாராக உள்ள படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆரம்பமான படம் என்ற பெருமையைப் பெற்ற படம் 'சங்கமித்ரா'. தேனாண்டாள் ஸ்டுடியோஸ் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க, சுந்தர் சி இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நாயகர்களாக நடிக்க உள்ள படம் இது. இந்தப் படத்தின் ஆரம்ப விழாவிற்காக கேன்ஸ் வரை சென்ற படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன், அதன் பின்னர் படத்திலிருந்து திடீரென விலகினார்.
கைவசம் 'சபாஷ் நாயுடு' தவிர வேறு எந்தப் படமும் இல்லாத ஸ்ருதிஹாசன் கடந்த வாரம் சென்னைக்கு வந்து பல பேட்டிகளைக் கொடுத்தார். அப்போது 'சங்கமித்ரா' படம் பற்றி பேச விரும்பவில்லை என்று அவர் சொன்னார். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவி குஷ்பு, ஸ்ருதிஹாசன் மறைமுகமாகத் தாக்கி டுவிட்டரில் நேற்று இரவு காட்டமான பதிவு ஒன்றைப் போட்டுள்ளார்.
“இந்தியாவிலியே இதுவரை இல்லாத பொருட்செலவில் எடுக்கப்பட உள்ள 'சங்கமித்ரா' போன்ற படம், சரியான திட்டமிடுதல் இல்லாமல் எடுக்க முடியாது. 'சங்கமித்ரா' படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியாகவில்லை என சிலர் மாறான கமெண்ட்டுகளை கூறி வருகிறார்கள். இதற்கான வேலைகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. தொழிற்பண்பு இல்லாதவர்களுக்கு அது பற்றி தெரியாது.
'சங்கமித்ரா' போன்ற படங்களுக்கு ஷுட்டிங் என்பது வெறும் 30 சதவீதம் தான். அதற்கு முன்பாகவே 70 சதவீத வேலைகள் முடிந்துவிடும். உங்களது குறைகளுக்காக மற்றவர்களை குறை சொல்லக் கூடாது, திராட்சி புளித்துவிட்டதா?. பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடமிருந்து இன்னும் கொஞ்சம் தொழிற்பண்பை எதிர்பார்க்கிறேன். உங்களது சொந்தத் தவறுகளைப் பார்ப்பதும், ஏற்றுக் கொள்வதும், உங்களை நீண்ட தூரம் போகச் செய்ய தாழ்மையான உதவியாக இருக்கும்,” என குஷ்பு காட்டமாக டிவிட்டரில் கூறியுள்ளார்.