'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் தப்பாட்டம். துரை சுதாகர், டோனா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். முஜிபுர் ரகுமான் இயக்கி உள்ளார். இது தப்பாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டது. இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் வசூலை விவசாய போராட்டத்தில் உயிரிழந்த, மற்றும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
தற்போது படம் வெளிவருதற்கு முன்பே விவசாய போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் உயிரிழந்த 4 விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாயை படக்குழுவினர் வழங்கினர்.
"தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிவாரணம் வேண்டி, மந்திரிகளிடமும், முதலமைச்சரிடம் நேரடியாக மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது தப்பாட்டம் படக்குழுவினர் பண உதவி செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் படத்தின் மொத்த வசூலையும் விவசாயிகள் நலனுக்கு தரவிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.” என்றார் அய்யாகண்ணு.