‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
"அரசு தற்போது அறிவித்திருக்கும் 2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் திரைப்படங்களுக்கான மானியத்தொகை வழங்குதல், மற்றும் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசால் வழங்கும் மாநில அரசு விருதுகள் அறிவிப்பானது தமிழ் திரையுலகினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் பழனிச்சாமிக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும், அரசு துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் எங்களது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாகவும், அனைத்து திரையுலகினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.