போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
அண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஆர்.பார்த்திபன், மலையாள இயக்குநர் எம்.ஏ.நிஷாத் இயக்கவிருக்கும் 'கேணி' திரைப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க உள்ளார்.
பார்த்திபன் உடன் நடிகை ஜெயப்பிரதா, நாசர், 'தலைவாசல்' விஜய் ஆகியோரும் முக்கியவேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். கேரள மாநிலம் உருவான 1956 ஆம் ஆண்டில் சம்பவங்கள் நடப்பதுபோல் 'கேணி' படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தையும், கேரளாவையும் தனித்தனி மாநிலமாக பிரிக்கும்போது, ஒரு கிணறு, ரெண்டு எல்லைக்கும் பொதுவான பகுதியில் அமைந்துவிடுகிறது. அந்த கிணறை சொந்தம் கொண்டாடும் இரண்டு எல்லைப்பகுதிகளின் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கேணி படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.
மலையாள இயக்குநராக இருந்தாலும், தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கேணி படத்தை இயக்கியுள்ளாராம் நிஷாத். அதனால்தான் இந்தப்படத்தில் நடிக்க பார்த்திபன் சம்மதம் தெரிவித்தாராம்.
கேணியைப் பற்றிய கதைபோல் தோன்றினாலும், உண்மையில் முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய படம் இது என்று கூறப்படுகிறது.