போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஜய்யுடன் நடித்த பைரவா படத்திற்கு பிறகு கோலிவுட்டில் உச்ச நடிகையாகி விடுவோம் என்பதுதான் கீர்த்தி சுரேஷின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதன்பிறகு அவருக்கு சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படவாய்ப்பு மட்டுமே கிடைத்தது.
அதனால் ஏற்கனவே தெலுங்கில் நானியுடன் நேனு லோக்கல் படத்தில் நடித்து வந்தவர் அடுத்தடுத்து சில படங்களில் அவசரகதியில் கமிட்டானவர், தற்போது மூன்று தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில், தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாநதி மற்றும் திரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில், ஜூலை மாதம் 20-ந்தேதி முதல், ஆகஸ்ட் 20-ந்தேதி வரை ஐரோப்பா நாட்டில் நடக்கிறது. அங்கு பவன் கல்யாணுடன் கீர்த்தி சுரேஷ் அதிரடி ஆட்டமாடும் இரண்டு டூயட் பாடல்கள் படமாகிறதாம். அதனால் ஒரு மாதம் காலத்திற்கு ஐரோப்பா பறக்கிறார் கீர்த்தி சுரேஷ்.