செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி |
மத்திய அரசின் தணிக்கைக் குழுவால் 'யு' சான்றிதழ் வழங்கப்படும் தமிழ்ப் படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி விலக்கு அளிப்பதற்காக தமிழக அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. தணிக்கை செய்யப்பட்டு 'யு' சான்றிதழ் வழங்கப்படும் படங்களை இந்தக் குழுவினர் பார்ப்பார்கள்.
அதன்பின் அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே அந்தப் படங்களுக்கு தமிழக அரசால் வரி விலக்கு வழங்கப்படும். இப்படி வரி விலக்கு பெறுவதிலும் பாரபட்சம் காட்டுவதாக தமிழக அரசு மீது தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். வரி விலக்கு பெற லஞ்சம் பெறப்படுவதாகவும் திரையுலகினர் மத்தியில் ஒரு புகார் இருக்கிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் நேற்று ஒரு டிவீட் செய்துள்ளார்.
அதில், “பல வருடங்களாக 'யு' சான்றிதழ் வரி விலக்கு என்பதிலும் ஊழல் நடந்து தமிழ்நாட்டில் அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். ஜிஎஸ்டி மட்டுமே அதை நீக்கும் என்ற ஆதாயம் இருந்தது. ஆனால், 30 சதவீதம் கேளிக்கை வரியும் இருந்தால், ஜிஎஸ்டி என்பதே தவறு. கேளிக்கை வரியும், ஜிஎஸ்டி வரியும் டிக்கெட்டின் நிகர விலையில் சேருமா என்பதில் குழம்பிப் போயுள்ளார்கள். இது வெறும் ஜிஎஸ்டி 18 சதவீதம் அல்லது 28 சதவீதமாக இருக்கட்டும், இல்லையென்றால் ஸ்டிரைக்.
தமிழ்நாடு அரசு பல வருடங்களாக யு சான்றிதழ் என்பதுடன் வரி விலக்கிற்கு லஞ்சம், தமிழ்ப் பெயர் ஊழல், என்று தமிழ் சினிமாவை தண்டித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகம் இதில் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். நாம், மத்திய மாநில அரசுகளின் குழப்பத்தால் விளையாடப்பட வைக்கிறோம். ஜிஎஸ்டி, ஒரே நாடு, ஒரே வரி, விதிவிலக்கு இல்லை,” என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
சித்தார்த் தவிர்த்து வேறு யாரும் இந்த அளவிற்கு ஆவேசத்துடன் ஜிஎஸ்டி பற்றி கருத்து சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.