அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு |
டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. முதல் படமே அவருக்கு ஹிட்டாக அமைந்தது. என்றாலும் அதன்பிறகு நடித்த யாகவராயினும் நா காக்க, கோ-2, கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்கள் தோல்வியடைந்து அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தன. இந்தநிலையில், ஆதியுடன் அவர் நடித்து சமீபத்தில் வெளியான மரகத நாணயம் வெற்றி பெற்று தற்போது தமிழ் சினிமா மீது நிக்கி கல்ராணிக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
மேலும், இந்த படத்தைத் தொடர்ந்து நெருப்புடா, கீ, ஹரஹர மகாதேவகி, பக்கா என நான்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நிக்கி கல்ராணி, சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருவதாக சொல்கிறார். அதோடு, இப்போது நான் நடித்து வரும் படங்கள் அனைத்துமே நல்ல கதைகளில் உருவாகி வருவதால் அடுத்தடுத்து எனக்கு ஹிட் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அதன்காரணமாக, இதுவரை ஹோட்டல்களில் தங்கியபடியே தமிழ்ப்படங்களில் நடித்து வந்த நான் இப்போது சென்னையில் புதிய வீடு வாங்கி குடியேறி விட் டேன் என்கிறார் நிக்கி கல்ராணி.