தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
பிரபாஸ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், ராணா, சத்யராஜ், நாசர் நடிப்பில் ராஜ மவுலி இயக்கிய பிரமாண்ட சரித்திர படம் பாகுபலி-2. இந்த படம் முதல் பாகத்தை விட அதிகப்படியாக வசூலித்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக பல வருடங்களாக இரவு பகலாக கடினமாக உழைத்த ராஜமவுலி, அதையடுத்து தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்று ஓய்வெடுத்து வந்தவர், சமீபத்தில் தான் இந்தியா திரும்பியிருக்கிறார்.
இதற்கிடையே, ராஜமவுலியின் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர்., நடிப்பதாக ஆந்திர மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவரது அடுத்த படத்திற்கும் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தின் ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஜமவுலியிடம், அடுத்தபடம் குறித்து மீடியாக்கள் கேட்டபோது, அடுத்த படம் குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்துள்ளார்.
மேலும், பாகுபலி-2 படத்திற்கு பிறகு ராஜமவுலியின் புகழ் பாலிவுட்டிலும் பரவி விட்டதால், இப்போது அவரை இந்தி பட நிறுவனத்துக்கு படம் இயக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் அழைத்த வண்ணம் உள்ளார்களாம். ஆனால் ராஜமவுலிக்கு ஏற்கனவே சான்ஸ் கொடுத்த தெலுங்கு பட அதிபர்கள் தங்களுக்கு படம் இயக்கித்தருமாறு அவரை இன்னொரு பக்கம் துரத்துகிறார்களாம். அதனால் அடுத்த படத்தை யாருக்கு இயக்குவது என்ற பெரும் குழப்பத்தில் ராஜமவுலி இருப்பதாகவும் செய்தி பரவியிருக்கிறது.