போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
சமுத்திரகனியின் தொண்டன் படத்தில் அவரது தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் அர்த்தனா. ஆனால் அர்த்தனா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஜி.பி.பிரகாஷ் நடித்துள்ள செம படத்திற்குத்தான். வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நடிகை தேடினார்கள். முதல் பாகத்தில் நடித்த சரண்யா மோகன் திருமணமாகி செட்டிலாகிவிட்டதால் அவரைப்போன்ற துறுதுறுப்பான நடிகை தேடியதில் சுசீந்திரனுக்கு கிடைத்தவர் அர்த்தனா. மூன்றாவதாக ஒப்பந்தமான படம்தான் தொண்டன். இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டே தான் மூன்றாவது படத்தில் தங்கையாக நடித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
முதல் படத்தில் தங்கையாக அறிமுகமாகிவிட்டீர்களே என்று எல்லோரும் வருத்தமாக கேட்கிறார்கள். தங்கையாக நடிக்கிறது அவ்வளவு பெரிய தப்பா. சமுத்திரக்கனி சார் இயக்கம், நடிப்பு என்றதும் கதையே கேட்காமல் ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்புக்கு இரண்டு நாள் முன்னாடி போன் பண்ணி என் கேரக்டர் பற்றி ஒரு வரியில் சொல்லுங்க நான் ரெடியா வர்றேன். என்றேன் "என் தங்கை, நல்ல மங்கை" என்று மட்டும் சொன்னார். துணிந்து நடித்தேன். என் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாததை அவரது தங்கை கேரக்டர் மூலம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. அடுத்து இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். ஆனாலும் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன். நல்ல கதை, நல்ல கேரக்டர் கிடைத்தால் எந்த கேரக்டரிலும் நடிப்பேன் என்கிறார் அர்த்தனா.