‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை வரலட்சுமி சரத்குமார், பெண்களை பாதுகாக்கும் பொருட்டு சேவ் சக்தி என்று அமைப்பை சில மாதங்களுக்கு முன்னர் துவக்கினார். பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வரலட்சுமி கூறியிருந்தார். மேலும் இதுதொடர்பாக சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தி, அதுகுறித்து மாநில அரசுக்கு ஒரு மனு கொடுக்கப்போவதாகவும் முன்பு தெரிவித்திருந்தார் வரலட்சுமி. அதன்படி, நடிகை வரலட்சுமி, தமிழக முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வரலட்சுமி... "பெண்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டம் தோறும் பெண்களுக்கான மகிளா கோர்ட் அமைக்க வேண்டும், பெண்கள் பாதிக்கப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 6 மாத காலத்திற்குள் தண்டனை அளிக்கப்பட வேண்டும்" என்று முதல்வரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.