ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
இசை அமைப்பாளர் பரணி இயக்கி, இசை அமைத்திருக்கும் படம் ஒண்டிக்கட்ட. நண்பர்களுடன் இணைந்து அவரே தயாரித்திருக்கிறார். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இசை அமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், தினா, சத்யா, அம்ரீஷ் கலந்து கொண்டனர். விழாவில் எஸ்.ஏ.ராஜ்குமார் பேசியதாவது:
இந்த படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. தனது சொந்தப் படம் என்பதற்காக அல்ல, பரணி எப்போது இசை அமைத்தாலும் அதில் மெலடி தூக்கலாக இருக்கும். மெலடி பாடல்கள்தான் காலத்தை வென்று நிற்கும். ஆனால் இன்றைக்கு புதிய டிரண்ட் என்று சொல்கிறார்கள். இசையை பொறுத்தவரையில் டிரண்ட் என்பதே கிடையாது. இசை என்றைக்கும் இசைதான். டிரண்ட் என்று சொல்லி பாடல்களை குப்பையாக தருகிறார்கள். என் வாயில் கெட்ட வார்த்தை வருகிறது. சபை நாகரீகம் கருதி பேசவில்லை.
இவர்களாக வெறும் சத்தங்களால் ஒரு பாடலை உருவாக்கி விட்டு அதையே டிரண்ட் என்கிறார்கள். ஒரு இசை அமைப்பாளரின் திறமை மெலடி பாடல்களில்தான் தெரியும். இளையராஜா போன்றவர்கள் இப்போதும் தங்கள் தரம் குறையாமல் இசை தருவதற்கு காரணம் அவர்கள் டிரண்டை நம்புவதில்லை. இசையை நம்புகிறார்கள். இசை என்பது வெறும் சத்தங்களால் உருவாவதல்ல. கதை, கதைக்கான சூழல், இயல்பு, கதாபாத்திரங்களின் தன்மை இவற்றால் உருவாவது. இவற்றில் பணியாற்றுவதால் ஒவ்வொரு இசை அமைப்பாளருக்குள்ளும் ஒரு இயக்குனர் இருக்கிறார். பரணி அதனை இப்போது வெளிக் கொண்டு வந்திருக்கிறார் என்றார் எஸ்.ஏ.ராஜ்குமார்.