போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோணேட்டம் பேட்டை. இது திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்து மக்கள் தங்கள் மண்ணின் மைந்தனாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 72வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்கள். முன்னதாக சொந்த கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அங்கு தான் பிறந்த வீட்டை பார்த்தார். பின்னர் அங்குள்ள கேவிலில் சாமி கும்பிட்டார். பின்னர் நடந்த விழாவில் எஸ்.பி.பி., உருக்கமாக பேசியது வருமாறு:
72 ஆண்டுகளுக்கு முன் இந்த கோணேட்டம்பேட்டை கிராமத்தில் உள்ள வீட்டில் சிறிய அறையில் பிறந்தேன். எனது தந்தை கதாகாலட்சேபம் தொழில் செய்தவர். நான் சினிமாத்துறையில் நுழைந்த பிறகு உலக அளவில் புகழ் பெற்றேன். அதனால் என் தாய்மொழியை (தெலுங்கு) மறந்து நீண்ட நாட்களாகிவிட்டது. எனது தாய்மொழி இப்போது இசை தான். இந்த கிராமத்திற்கு நான் இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆனாலும் நான் பிறந்த இந்த கிராமத்து மக்கள் என் மீது வைத்திருக்கும் பாசம் என்னால் மறக்க முடியாது.
நான் பிரபலமானதால் தான் சுதந்திரம் பறிபோனது. என்னால் தனியாக தெருவில் நடக்க முடியவில்லை. சாமி கும்பிட கோவிலுக்கு செல்ல முடியவில்லை. உறவினர்கள் வீட்டுக்கு கூட செல்ல முடியவில்லை. நான் செல்லும் இடம் எல்லாம் திரளான ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொள்கின்றனர். இதனால் என்னால் பிறருக்கு தொல்லை என்று எல்லாவற்றையும் தவிர்த்து விடுகிறேன்.
என் கிராமத்து மக்கள் என்னை பாலசுப்பிரமணியமாக பார்க்காமல் கோணேட்டம்பேட்டை மணியாக பார்த்தால் சந்தோஷப்படுவேன். இனி இந்த கிராமத்துக்கு அடிக்கடி வந்து செல்வேன். ஆடம்பரம் எனக்கு பிடிக்காது. நான் ஆண்டவனை வேண்டும்போது, கெட்டவர்களை நல்லவர்களாக்க வேண்டும். நல்லவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுவேன். இப்போது நம்பியவர்களை கெடுப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. என்னை நம்ப வைத்து கெடுத்தவர்களும் இருக்கிறார்கள்.
நான் பிறந்த இந்த கிராமத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இங்கு உள்ள துலக்காணத்தம்மன் கோவில் குளம் புதைந்து போய் உள்ளது. தூய்மையான இந்த குளத்தை தூர்வாரி சீர்படுத்த வேண்டும். இதற்காக கண்டிப்பாக உதவி செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.