ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
கே.தங்கவேலு என்பவர் தயாரிப்பில், ராசா விக்ரம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாய மோகினி. இதில் குஷ்புவின் தம்பி அப்துல்லா, சாரிகா, ஜோதிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயாக பெண் சாமியாராக நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் பெண் சாமியாராக நடித்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார் கே.ஆர்.விஜயா. அவர் கூறியதாவது:
நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் கேட்டு வந்தார்கள். சின்ன கேரக்டர்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டேன். இது நிஜத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த ஒரு பெண் துறவி கேரக்டர் என்றார்கள். அப்படியானால் அதுபற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அவர்கள், என்னை அந்த துறவியின் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துக் சென்று காட்டினார்கள். கோவிலுக்கும் கூட்டிச் சென்றார்கள். அவற்றை பார்த்து நம்பிக்கை வந்த பிறகுதான் ஒரு புனிதமான பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது, நடிக்க ஒப்புக் கொண்டேன். என்றார்.