இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
நடிகர் சிரஞ்சீவி மீது அவதூறு பரப்பியதக நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி நடிகை ஜீவிதாவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரும், அவருடைய மனைவி நடிகை ஜீவிதாவும் சமீபத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, நடிகர் சிரஞ்சீவி நடத்தும் அறக்கட்டளையிலும், ரத்த வங்கியிலும் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டினர்.
இதனால் அவர்கள் மீது சிரஞ்சீவியின் மைத்துனரும், பட அதிபருமான அல்லு அரவிந்த், ஐதராபாத் 17வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முதல் நோக்கிலேயே குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக கருதியதால், ராஜசேகரும், ஜீவிதாவும் பிப்ரவரி 9ம்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.