‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'தனி ஒருவன்' வெற்றிப் படத்திற்குப் பிறகு மோகன்ராஜா இயக்கி வரும் படம் 'வேலைக்காரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் போடப்பட்ட ஒரு கிராமத்து அரங்கில் பல நாட்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்காக படக் குழுவினர் மலேசியா சென்றார்கள்.
ஏப்ரல் 25-ம் தேதி மலேசியாவில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 25 நாட்களுக்கும் மேலாக நடந்து நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இது பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் மோகன்ராஜா “என் அபிமான மலேசியாவில் நான் படமாக்கியுள்ள மூன்றாவது படம். மிகவும் வெற்றிகரமான படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. அன்பான தமிழ் மக்களுக்கு எனது நன்றி. எப்போதும் போல் அன்பான உபசரிப்பு,” எனத் தெரிவித்துள்ளார்.
மோகன்ராஜா இதற்கு முன் இயக்கிய படங்களில் 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தில்லாலங்கடி' ஆகிய படங்கள் மலேசியாவிலும் படமாக்கப்பட்டிருந்தன. தற்போது 'வேலைக்காரன்' படத்தையும் மலேசியாவில் படமாக்கியுள்ளார்.