‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மத்திய அரசின் ஜிஎஸ்டி.,யின் படி சினிமாவுக்கு 28 சதவிகித வரி வருகிறது. இதனால் தியேட்டர் கட்டணம் கடுமையாக உயரும். அரசின் வரிச்சலுகைகள் கிடைக்காது. ஜிஎஸ்டி.,யால் சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் வரிவிதிப்பை கண்டு பயப்படுவதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. ஏற்கெனவே ஆன்லைன் பைரசி, திருட்டு விசிடி, கேபிள் ஒளிபரப்பு என சினிமா ஆபத்தில் சிக்கி உள்ளது. இந்த நிலையில் உச்சகட்ட வரியாக 28 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது. இது திரையுலகத்தை வேரோடு சாய்க்கிற முயற்ச்சியாகும். சினிமாவுக்கு எந்த பாதுகாப்பும் வழங்காத மத்திய அரசு அதன் மீது உச்சகட்ட வரி விதித்துள்ளது. இந்த முடிவை வன்மையாக கண்டிக்கிறோம்.
சினிமா என்றால் ரஜினி, கமல், ஏ.ஆர்.ரகுமான், எஸ்.எஸ்.ராஜமவுலி மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் தினம் வேலை செய்து வயிற்று பிழைப்பு நடத்தி வரும் தொழிலாளர்கள்தான் 95 சதவிகிதம் இருக்கிறார்கள் என்பதை உணர மறுக்கிறார்கள். டிக்கெட் கட்டணம்தானே உயரும் என்ற சாதாரணமாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையாக பாதிக்கப்படப்போவது திரைப்பட தொழிலாளர்கள்தான்.
தமிழ் நாட்டில் திரைப்படத்தை நம்பி 5 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியா முழுக்க 15 லட்சம் பேர் நேரடியாகவும் 25 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் விதமாக இந்த வரிவிதிப்பு அமைந்துள்ளது. இந்த நிலையில் திரைப்பட அமைப்புகள் பிரிந்து பலவீனப்பட்டு விடாமல் திரைப்பட தொழிலார்களின் வாழ்க்கையை பாதுகாப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.